அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

2 மணி நேரத்தில் 36 புத்தகங்கள்!

வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால், இளம் வயதினரிடையே வாசிப்புப் பழக்கம் மறைந்து போன நிலையில், இந்திய-அமெரிக்க சிறுமியான  5 வயது கியாரா கவுர்,  இரண்டு மணி நேரத்திற்குள் 36 புத்தகங்களை வாசித்து

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 1:04 pm

ரிஷி

வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால், இளம் வயதினரிடையே வாசிப்புப் பழக்கம் மறைந்து போன நிலையில், இந்திய-அமெரிக்க சிறுமியான 5 வயது கியாரா கவுர், இரண்டு மணி நேரத்திற்குள் 36 புத்தகங்களை வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய நிகழ்வுகளில், கியாரா கவுரின் வாசிப்பு மீதான ஆர்வம் பேசுபொருளாக மாறியுள்ளது. 36 புத்தகங்களை 2 மணி நேரம் இடைவிடாது வாசித்ததற்காக சமீபத்தில் லண்டனின் உலக புத்தகத்திலும், ஆசிய புத்தகத்தின் சாதனைகளில் இடம்பெற்றுள்ளார் இவர். பிப்ரவரி 13, 2021 அன்று இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனைக்காக உலக சாதனை புத்தகம் சிறுமி கியாராவை "குழந்தை பிராடிஜி' என்று வர்ணித்துள்ளது.

கியாரா, தற்போது அபுதாபியில் வசித்து வருகிறார். இவர், பள்ளி நூலகத்தில், ஓய்வறையில், காரில் என எங்கிருந்தாலும் படித்து கொண்டே இருந்திருக்கிறார். இதை கவனித்த கியாராவின் ஆசிரியர்களில் ஒருவர் அவரை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கியாரா புத்தகங்கள் வாசிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வண்ணமயமான படங்கள் மற்றும் பெரிய நூல்களைக் கொண்டிருப்பதை கியாரா படிக்க விரும்புகிறாள். அவளுக்கு பிடித்த சில வாசிப்புகளில் "சிண்ட்ரெல்லா', "ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்', "லிட்டில் ரெட் ரைடிங் ஹூட்' ஆகியவை அடங்கும்' எனக் கூறியிருக்கிறார்.

கியாராவின் தாத்தா தான் அவரிடம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவரின் தாத்தா வாட்ஸ்அப் காலில் பேசும்போது மணிக்கணக்கில் அவர் கதை கேட்பாராம். ஆகவே, கியாராவின் வளர்ப்பிலும், புத்தகங்கள் மீதான அவரது அன்பிலும் தாத்தா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.