அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரோனா பணியில் பெண் மார்ஷல்கள்!

கரோனா 2-ஆம் அலை இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்,  இந்திய மாநிலங்கள் அனைத்தும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  விதிமுறைகளை  அமல்படுத்தி வருகின்றன.

News image
Updated On :2 ஜூன் 2021, 12:13 pm

ரிஷி

கரோனா 2-ஆம் அலை இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்திய மாநிலங்கள் அனைத்தும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு மாநகராட்சி அமைப்பான "புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே' (பிபிஎம்பி) கரோனா விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும் பராமரிப்பு மையங்களில் உதவுவதற்கும் சோதனை அடிப்படையில் நகரம் முழுவதும் 11 பெண் மார்ஷல்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று ஆரம்பித்தபோதே முகக்கவசம் அணிந்துகொள்வது மற்றும் சமூக தூரத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க 230- க்கும் மேற்பட்ட ஆண் மார்ஷல் வீரர்களை நகரின் முக்கிய வீதிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் பணி அமர்த்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது பெண் மார்ஷல்களை இறக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமை மார்ஷல் அதிகாரி கர்னல் ராஜ்பீர் சிங் கூறுகையில்,
"முதல் முறையாக 11 பெண் மார்ஷல்களை சோதனை அடிப்படையில் பணியமர்த்தியுள்ளோம். அவர்கள் ஆண் மார்ஷல்களைப் போன்று பயிற்சியைப் பெற்றவர்கள். இவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகப்பேறு இல்லங்கள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் நகர சோதனைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கரோனா தொடர்பான பணிகளுக்கு பெண் மார்ஷல்கள் பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இப்போது, பணி அமர்த்தப்பட்டுள்ள 11 பேரும், கரோனா விதிமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்துகிறார்கள். இதனால், விதிமுறைகளை மீறும் நபர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதற்கும், கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெண் மார்ஷல்களை ஈடுபடுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது'' என்றார்.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு, மகாதேவபுராவில் உள்ள கரோனா மையத்தில் நிறுத்தப்பட்டடுள்ள பெண் மார்ஷலான பவானி கே.ஜி இது குறித்து கூறுகையில், ""நான் எப்போதும் மக்களுக்கு சேவை செய்யும் பணியையே விரும்புவதால் இந்த வேலைக்கு விண்ணப்பித்தேன். எனது கல்லூரி நாட்களில் என்.சி.சி.யில் இருந்தேன். "சேவைதான் எங்கள் குறிக்கோள்' என்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் என் பணியைத் தொடங்கி, மதியம் 3 மணி வரை வேலை செய்கிறேன். இந்த துன்பகரமான காலத்தில் மக்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்றார்.

இவர், கரோனா பராமரிப்பு மையத்தில், நோயாளிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் அறிகுறிகளைச் சரிபார்த்து, அவர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் ஆறுதல் அளித்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பவானியை போலவே வில்சன் கார்டன் கரோனா பராமரிப்பு மையத்தில் பணிபுரிபவர் மற்றொரு மார்ஷலான ஜோதி. இவர் தனது கடமையைச் செய்வதற்காக தினமும் சிக்பேட்டிலிருந்து 10 கிலோமீட்டர் பயணம் செய்து வில்சன் கார்டன் கரோனா பராமரிப்பு மையத்துக்கு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ""பெங்களூருவில் பெண் மார்ஷல்களின் முதல் தொகுப்பில் நானும் ஒருத்தியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மக்களை கையாள்வதற்கும் அவர்களுக்கு கரோனா பராமரிப்பு மையத்தில் உதவுவதற்கும் பெங்களூரு மாநகராட்சியிடம் இருந்து முறையான பயிற்சி பெற்றுள்ளோம்," என்று கூறியிருக்கிறார் மார்ஷல் ஜோதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.