தேவையானவை:
தினை அரிசிமாவு - 1 கிண்ணம்
வெல்லம் - அரைக் கிண்ணம்
நெய் - 2 மே.கரண்டி
முந்திரி நறுக்கியது
தேங்காய் துருவல் - 1 மே.கரண்டி
பொட்டுக்கடலை - 1 மே.கரண்டி
ஏலக்காய் தூள் சிறிது
சுக்கு தூள் சிறிது
உப்பு சிறிது
உப்பு - 1சிட்டிகை
வாழை இலை
செய்முறை:
தினைமாவை இளம் சூடாக வறுத்துக்கொள்ளவும்.வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும்.
அதனுடன் பொன்னிறமாக நெய்யில் வறுத்த முந்திரி. தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் சுக்குதூள் சேர்த்து கலக்கவும்.
இக்கலவையை வறுத்த தினைமாவுடன் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கழுவிய வாழை இலையில் வைத்து நூலால் கட்டி ஆவியில் வேக விடவும். வாழை இலை மணத்துடன் கொழுக்கட்டை சுவையாக இருக்கும்.