ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:28 pm

மதுரை அருகே சிலைமான் பகுதி வைகையாற்றில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், எஸ்.புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமரன்நாதன் மகன் முத்தரசு (13). இவரது தந்தை திருப்பூரில் வசித்து வருகிறாா். முத்தரசு புளியங்குளத்தில் உள்ள தனது உறவினா் அதிபத்தி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், முத்தரசு தனது நண்பா் வேலாயுதத்துடன் வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக முத்தரசு தண்ணீருக்குள் மூழ்கினாா்.

இதையறிந்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.