தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரண்டைப் பொடி 

பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையைப் பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

News image
Updated On :20 அக்டோபர் 2021, 12:30 am

கவிதா பாலாஜி

பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வப்போது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையைப் பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

தேவையானவை:

பிரண்டை - 3 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
கடலை பருப்பு - அரை கிண்ணம்
வரமிளகாய் - 1 கைப்பிடி 
கருப்பு எள்ளு - 5 தேக்கரண்டி
பெருங்காயம் கட்டியாக - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
மிளகு - 2 தேக்கரண்டி

செய்முறை: 

பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து தட்டி கொட்டி ஆறவிடுங்கள். அனைத்தையும் தனித்தனியாக வாணலியில் வறுத்து வைத்து கொள்ளுங்கள். தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். முதலில் பிரண்டையை அரைத்து பிறகு மற்ற பொருள்களை சேர்த்து அரைக்கவும்.

இந்தப் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்து அவ்வப்போது பயன்படுத்துங்கள். இது நல்லெண்ணெய் சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். உதிரான சாதத்தில் பொடியை கலந்து சாப்பிடலாம். எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.