பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிந்துவுக்கு முக்கியத்துவம்!

சமீபத்தில் ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற வீராங்கனை பி வி சிந்து, நடிகையான தீபிகா படுகோனின் அழைப்பின் பேரில் மும்பை வந்திருந்தார். இரவு ஹோட்டல் ஒன்றில் விருந்து.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

அங்கவை


சமீபத்தில் ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற வீராங்கனை பி வி சிந்து, நடிகையான தீபிகா படுகோனின் அழைப்பின் பேரில் மும்பை வந்திருந்தார். இரவு ஹோட்டல் ஒன்றில் விருந்து.

தீபிகாவும், சிந்துவும் ஒன்றாக காரில் வந்து இறங்கினர். தீபிகாவின் கணவர் நடிகர் ரன்வீர் சிங் தாமதமாக வந்தார். முதலில் வந்த தீபிகா, சிந்து அங்கிருந்த ஊடகங்களுக்கு படம், வீடியோ பிடித்துக் கொள்ள நேரம் ஒதுக்கினர்.

வந்த ஊடகங்களில் சிலர் தீபிகாவிடம்... "மேடம்... தனியாக நில்லுங்கள்... உங்களைத் தனியாகப் படம் எடுக்க வேண்டும் " என்றனர்.

அதற்கு சிந்துவைக் கை காட்டி "இவரைத் தனியாக படம் பிடியுங்கள்.... இல்லை எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து எடுங்கள்..: என்றார் தீபிகா.

இந்த பதிலை ஊடகங்களும் சரி.. சிந்துவும் சரி... சற்றும் எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி பத்திரிகையாளர்கள் சிந்து, தீபிகா படுகோன் இருவரையும் சேர்த்து படங்களை பிடித்து முடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.