கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழைக்காலத்தில் ஏற்ற 7 உணவுகள்!

மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று செரிமான பிரச்னை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த  ஏழு முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். 

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:09 am

கூ.முத்துலட்சுமி

மழை காலங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று செரிமான பிரச்னை. இதனை தடுக்க, ஒருவர் தங்களது தினசரி டயட்டில் இந்த  ஏழு முக்கியமான நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். 

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க உதவும். வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த மூலமாகும். 

ஓட்ஸ்:

நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக ஓட்ஸ் கருதப்படுகிறது. ஓட்ஸ் உப்புமா முதல் ஓட்ஸ் கிரானோலா பார்கள் வரை பல்வேறு வழிகளில் ஓட்ஸினை உணவில் சேர்க்கலாம். அல்லது சாதாரணமாக ஓட்ûஸ கஞ்சி வைத்தும் குடிக்கலாம்.

ஆளி விதைகள்:

ஆளி விதை-பூக்கும் தாவரத்திலிருந்து கிடைக்கின்றன. இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதசத்து இரண்டும் அதிகம் நிறைந்துள்ளது. ஆளி விதைகள் நீரிழிவு நோயாளிகளின் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே, வழக்கமான உணவில் ஆளிவிதை சேர்க்க ஒரு சிறந்த வழி ஆளிவிதை ரைதா ரெசிபி தான். அரைத்த ஆளி விதையை கொஞ்சம் தயிரில் கலந்து அதில் மேலும் புதினா மற்றும் உப்பு சேர்த்து சாப்பாட்டு சைடு டிஷ்-ஆக பரிமாறினால் ருசியாக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் பேரிக்காய்:

ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டையும் தோலுடன் அப்படியே சாப்பிடும் போது தோலில் உள்ள நார்சத்து உடலுக்கு கிடைக்கிறது. ஏனெனில் பழத்தை விட தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால்தான் அதன் தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் பழங்களை அப்படியே சாப்பிடும்போது சிறந்த பலனை தருகின்றன.

புரோக்கோலி:

புரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இந்த சுவை நிரம்பிய காய்கறியை சிறிது எண்ணெய், உப்பு மற்றும் பூண்டுடன் வெறுமனே வறுத்து சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளன.

பருப்பு:

பருப்பு வகைகள் புரதத்தின் வளமான மூலமாகும். ஆனால் அவற்றில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகளுடன் காணப்படும் நார்ச்சத்து உங்கள் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் மனதையும் உடலையும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் முதல்  முந்திரி பருப்புகள் வரை அனைத்து வகையான நட்ஸ்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் சிறிதளவு நட்ஸ்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழ வால்நட் ஸ்மூத்தி, பாலில் நட்ஸ் கலந்து சாப்பிடுவது போன்ற விதவிதமான முறையிலும் நீங்கள் நட்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.