ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

28 வயது சன்யோகிதா 7 வயது அப்ரா கடப்ரா

தன்னுடைய பதிமூன்றாவது வயதில் புணேவில் நடந்த கோடைக்கால ஈக்யூஸ்ட்ரியன் என்கிற குதிரை சவாரி விளையாட்டு பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தான் பயிற்சி பெறும் மார்வாரி குதிரைகளுடன் சென்றிருந்த

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 12:30 am

பூா்ணிமா


தன்னுடைய பதிமூன்றாவது வயதில் புணேவில் நடந்த கோடைக்கால ஈக்யூஸ்ட்ரியன் என்கிற குதிரை சவாரி விளையாட்டு பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தான் பயிற்சி பெறும் மார்வாரி குதிரைகளுடன் சென்றிருந்த சன்யோகிதா கடா, அங்கு போட்டியில் பங்கேற்ற இளம் வீராங்கனைகளை பார்த்தார். உடனே தானும் குதிரை சவாரி விளையாட்டில் தீவிரமாக பயிற்சி பெற வேண்டுமென்று தீர்மானித்தார். அதிர்ஷ்ட வசமாக 2006 ஆம் ஆண்டு முதல் ரைடிவ் அகாதெமியை நடத்தி வரும் ஈக்யூஸ்ட்ரியன் பயிற்சியாளர் கர்னல் குலாம் முகமதுகான் என்பவரை சந்தித்தார். அவரிடம் முறையாக பயிற்சிப்பெறத் தொடங்கினார். சன்யோகிதாவின் முயற்சியும் பயிற்சியும் வீண் போகவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மும்பையில் நடந்த இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் பார் ஈக்யூஸ்ட்ரியன் ஸ்போர்ட்ஸில், கலந்து கொண்ட சன்யோகிதா, பி பிரிவில் முதல் இடங்களை பிடித்துள்ளார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் அனைத்து பிரிவினருக்கும் நடந்த ஈக்யூஸ்ட்ரியன் பிரிமியர் லீக் போட்டியில் சிறந்த குதிரை சவாரி வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றதோடு, அனைத்திந்திய அளவில் டிரஸ்úஸஜ் சீனியர் 1 என்கிற நான்கு இடங்களையும் பிடித்துள்ளார். கூடவே மும்பையில் நடந்த அமெச்சூர் ரைடர்ஸ் கிளப்பில் பங்கேற்பதற்காக 15 ஜூனியர் நேஷனல் வீராங்கனைகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் கல்லூரி படிப்பையும் கவனித்துக் கொண்டு கூடவே ஈக்ஸ்யூட்ரியன் பயிற்சி பெறுவது சன்யோகிதாவுக்கு சிரமமாக இருந்ததாம். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வகுப்பு முடிந்ததும் இவரது தந்தை இவரை பயிற்சி பெற அழைத்துச் செல்வாராம்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுத இருநாள்கள் இருந்தபோது கூட ஈக்ஸ்யூட்ரியன் போட்டியில் பங்கேற்க சென்றதுண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற துவங்கியிருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஏனெனில் 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள் தான் நடக்கும் என்று கூறும் சன்யோகிதாவுக்கு தற்போது 28 வயதாகிறது.

கடந்த இரண்டாண்டுகளாக போட்டியில் கலந்து கொள்ள ஏழு வயதான அப்ரா கடப்ரா என்கிற பெல்ஜியன் குதிரையை பயன்படுத்தி வருகிறாராம்.

ஒரே குதிரையில் பயிற்சிப் பெறுவது போட்டிகளில் வெற்றிப் பெற உதவும் என்று கூறும் சன்யோகிதாவின் கணவர் ஆஷிஷ் லிமாயி, புணேயில் கர்னல் குலாம் முகமது கான் பயிற்சி கூடத்தில் குதிரை சவாரியில் பயிற்சிப் பெற்றவர் என்பதால் அவரே தற்போது சன்யோகிதாவுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

நாங்களிருவரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடும்போது கணவன் மனைவி என்பதையே மறந்துவிடுவோம். அவர் அளிக்கும் பயிற்சி கடுமையாக இருக்கும் தற்போது அவர் ஜெர்மனியில் பயிற்சி அளிக்கச் சென்றுள்ளார். இங்கு பயிற்சியில் எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பி என்னுடைய தவறை திருத்திக்கொள்வேன். அப்ராவுடன் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் பயிற்சிப் பெறுகிறேன். கூடவே மேலும் ஜந்தாறு குதிரைகளுக்கும் பயிற்சியளித்து வருகிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டுமென்பது என்னுடைய குறிக்கோள் ஆகும். அதற்குள் இடையில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க நான் வெற்றிக்காக எடுத்து வைக்கும் காலடிகளாகவும், நல்ல அனுபவமாகவும் இருக்கும்'' என்கிறார் சன்யோகிதா கடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.