ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சோளம் கட்லெட் 

சோளத்தை தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு. அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 6:00 am IST

தேவையானவை:

சோளம் - 1 கிண்ணம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 
பூண்டு - 2பல்
பச்சை மிளகாய் - 1
சிறிய தக்காளி - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1  தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 

சோளத்தை தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு. அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியை    அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து இதனுடன் சேர்க்கவும். கரம் மசாலா, கடலை மாவு மற்றும் சோளத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்து வரும் வரை வதக்கவும், பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். பிறகு இந்த கலவையை சின்ன சின்ன கட்லெட்களாக உருட்டி வைக்கவும். இதை தவாவில் போட்டு வேக வைத்து எடுக்கலாம் அல்லது  பிரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் பொரித்தும் எடுக்கலாம். 

சாஸூடன் உண்ணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.