தேவையானவை:
இளம் சோளம் - 1 கிண்ணம்
நாட்டுத் தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
சோம்பு- அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 2
துவரம் பருப்பு வேக வைத்த நீர் - 1 கிண்ணம்
மஞ்சள் தூள், மிளகுத்தூள் - தலா கால்
தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் (அ) நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
இளம் கதிராக உள்ள உதிர்த்த சோளத்தை வேக வைத்து சற்று நீர் விட்டு மிக்ஸியில் அடித்து பால் எடுத்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் (அ) நெய் விட்டு சூடானதும் அதில் சோம்பு மற்றும் ஏலம் போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சோளப் பாலையும் சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீரும் சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கி மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து சுடச் சுடப் பருகலாம்.