தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆரோக்கியம் காக்க!

நெல்லி முள்ளி, வெந்தயம் சிறிது, மிளகு ஆகியவற்றை ஊற வைத்து நைசாக அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறியதும் அலசினால் பொடுகு தொல்லை போய்விடும்.

News image
Updated On :19 ஜனவரி 2022, 12:30 am

ஆர். ராமலட்சுமி

நெல்லி முள்ளி, வெந்தயம் சிறிது, மிளகு ஆகியவற்றை ஊற வைத்து நைசாக அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறியதும் அலசினால் பொடுகு தொல்லை போய்விடும்.

வேப்பிலையை மசிய அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, பால் மற்றும் கடலை மாவைக் கலந்து முகத்தில் நன்கு தடவி சுமார் கால்மணி நேரம் கழித்து வெந்நீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் பருக்கள் நீங்கி புண் ஆறும்.

தொண்டைக் கமறல் தீர கற்பூரவள்ளிச் சாறில் கற்கண்டுத் தூளைப் போட்டுக் குடித்தால் தொண்டைக் கமறல் சரியாகும்.

தலைவலி விடாது வலித்தால் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சைச் சாறு இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி பாலில் வேக வைத்து விழுதுபோல் அரைத்து தலையில் தடவி நன்றாக ஊறிய பின் நீரில் அலசினால் முடி சுத்தமாகவும், பட்டு போன்று மிருதுத் தன்மையுடனும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.