மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பை தடவினால், சிரமமின்றி திறந்துமூடலாம்.
பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊறவைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.
தரையைத் துடைக்கும்போது தண்ணீரில் இரு தேக்கரண்டி உப்பை போட்டு, துடைக்க ஈக்கள் பறந்தோடும்.
துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
பட்டுப் புடவையின் ஜரிகையை உள்புறமாக மடித்துவைத்தால், கறுத்து போகாமல் பாதுகாக்கலாம்.