தலா 200 கிராம் கொத்துமல்லி, புதினாவுடன் 5 கிராம் இஞ்சி சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
*10 துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் ஊறப் போட்டு, இலைகளைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடிக்கலாம்.
* சீரகத் தண்ணீர் கோடைக்கான "சிம்பள் கூல்' தீர்வு.
* மோர் சேர்ந்த கற்றாழை ஜூஸ் மிகவும் நல்லது.
*நன்னாரி சர்பத், நெல்லி, கேரட் ஜூஸ், தேன் சேர்ந்த எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
*காலையில் வெள்ளரிச் சாறு, நெல்லிச்சாறு, கேரட் ஜூஸ்- இவற்றில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்.
*பாதாமை இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருப்பை மென்று தின்று நீரைக் குடித்தால் வெயில் காலத்தில் வரும் சிறுநீர் கோளாறுகள் வராது . உடல் குளிர்ச்சி அடையும்.