ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேழ்வரகு- பாலக் அடை 

முட்டைக் கோஸ், கேரட்  இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலக் கீரையை நன்றாக வேக வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :12 ஜூன் 2022, 1:59 pm

தேவையானவை:

பாலக்கீரை- 1 கட்டு
கேழ்வரகு மாவு- 100 கிராம்
தோசை மாவு- 50 கிராம்
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
முட்டை கோஸ்- 1 சிறியது
கேரட்- 50 கிராம்
கறி வேப்பிலை- 1 பிடி
உப்பு,எண்ணெய்- தேவையானவை

செய்முறை: 

முட்டைக் கோஸ், கேரட்  இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலக் கீரையை நன்றாக வேக வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேழ்வரகு மாவு, தோசை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளிக்க வேண்டும். பின்னர், நறுக்கிய முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதைக்க வேண்டும்.

அடைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவி மாவை விட்டு பரப்பி அதன் மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து கறுகாமல் வெந்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.