ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமியால் 5 பேருக்கு கிடைத்த வாழ்வு!

மிக இளம் வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்தவர் என்ற பெயரை நொய்டாவைச் சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி பெற்றுள்ளார்.

News image
Updated On :29 மே 2022, 12:30 am

தி. நந்​த​கு​மார்

மிக இளம் வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்தவர் என்ற பெயரை நொய்டாவைச் சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட நொய்டாவைச் சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி, அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஏப்ரல் 27-இல் சுடப்பட்டார்.  தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து,  அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  கோமா நிலைக்குச் சென்ற அவரைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்தது.  இதனால்,  மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்  தீபக் குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரோலியின் பெற்றோருடன் அமர்ந்து உடல் உறுப்புகள் தானம் குறித்து பேசினர். மற்ற குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் உடனடியாகத் தானம் பெற்று,  எய்ம்ஸ் மருத்துவமனையிலும், பிற மருத்துவமனையிலும் உறுப்புகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு உடனடியாகப் பொருத்தப்பட்டது. 

மகள் இறந்த சோகத்திலும்,   உடல் உறுப்புகளால் ஐந்து உயிர்களைக் காப்பாற்றியதற்காக ரோலியின் பெற்றோரை எய்ம்ஸ் மருத்துவர் பாராட்டினார்.
இதனால்,  இந்திய மருத்துவத் துறை வரலாற்றில் மிக இளம் வயதில் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர் என்ற பெருமையை ரோலி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரோலியின் தந்தை ஹர்நாராயண் பிரத்ஜாபதி கூறுகையில்,  "உடல் உறுப்புகளைத் தானம் செய்தால்,  மற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று எங்களுக்கு ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, சம்மதம் தெரிவித்தோம்' என்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.