ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் சோப்புகள், பாடிலோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்யும்போது, சருமத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக சருமத்தில் உள்ள மேக்கப்பை முழுமையாக அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால் துளைகள் அடைக்கப்படுவதால் எளிதாக சுவாசிக்க முடியாமல், நாளடைவில் சருமத்தில் பொலிவு குறையக்கூடிய வாய்ப்புள்ளது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூரிய ஒளி அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தளவுக்கு தவிர்க்கவும். குடை, சன்கிளாஸ் போன்ற பாதுகாப்புடன் செல்லலாம். இதனால், சூரிய ஒளியின் நேரடி பாதிப்பிலிருந்து தப்பிக்கும்போது சருமம் பாதுகாக்கப்படுகிறது. முகம் மட்டுமின்றி கழுத்து, காதுமடல்கள் மற்றும் கைகளுக்கும் தரமான சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம்.