தேவையான பொருள்கள்
முளைகட்டிய வெந்தயம் - 1கிண்ணம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முளைகட்டிய வெந்தயத்தை அதில் போட்டு வதக்கி, புளியை கரைத்து விட்டு கொதிக்கவிடவும். பிறகு மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த தொக்காக செயல்படுகிறது .