

சமையல் அறையில் புதினாச் செடியை வளர்த்து வந்தால் சிலந்தி, பூச்சிகள் வராது.
இரவில் படுப்பதற்கு முன் பிளீச்சிங் பௌடரை சமையல் அறையின் மூலைகளில் போட்டுவிட்டால், கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
எலுமிச்சை சாற்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து, தேய்க்க குழாய்கள் பளிச்சிடும்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.
மோர்க் குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு மோர் மிளகாயை வறுத்துப் போட்டுவிட்டால் ருசியாக இருக்கும்.
பிட்ரூட் சூப் செய்யும்போது, தக்காளியையும் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும்.
கீரையை சமைக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தால் சத்து வீணாகாது.
சூடான உணவுப் பொருள்களில் எலுமிச்சையைச் சேர்த்தால், உணவு கசப்பாகிவிடும். சூடு ஆறியவுடன் சேர்ப்பதுதான் சரி.
கேசரி தயாரிக்கும்போது இரு பேரீச்சம் பழங்களை பொடியாக அரிந்து போட்டால், சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.