கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பொங்கல் செய்யும் முன்..!

அரிசியை மிக்ஸியில் நொய்யாக உடைத்து பொங்கல் செய்தால், குழைவாக சீக்கிரம் செய்யலாம். ஆனால், பயத்தம் பருப்பை முன்னதாக வேக வைக்க மறக்க வேண்டாம்.

Published On :

அரிசியை மிக்ஸியில் நொய்யாக உடைத்து பொங்கல் செய்தால், குழைவாக சீக்கிரம் செய்யலாம். ஆனால், பயத்தம் பருப்பை முன்னதாக வேக வைக்க மறக்க வேண்டாம்.

பொங்கலுக்கு இனிப்புச் சுவை மட்டும் போதாது. முந்திரி, பாதம், அக்ரோட், சாரைப் பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து பரிமாறும்போது மேலே தூவி அலங்கரித்தால் அருமையான சுவை.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அவலை நெய்யில் வறுத்து சேர்த்தால் குழைவாகவும் கூடுதலாகவும் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, கடைசியாக நூறு கிராம் உதிர்ந்த கோவாவை போட்டு நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.

கொப்பரைத் தேங்காயைத் துருவி திராட்சை, முந்திரிப் பருப்பை அரைத்து சர்க்கரைப் பொங்கலில் கலந்தால் சுவையும் மணமும் கூடும்.  இதோடு, பசும்பால் சேர்த்தால் மணம் மேலும் அதிகரிக்கும்.

பொங்கலைக் கிளறும்போது,  சிறிது சிறிதாக நெய் ஊற்ற வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.சர்க்கரைப் பொங்கலில் தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போட்டால் சுவை இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.