தேவையான பொருள்கள் :
பாசிப்பருப்பு 1 கிண்ணம்
துருவிய வெல்லம் 2 கிண்ணம்
காய்ச்சிய பால் 2 கிண்ணம்
கற்றாழை 2 (தோல் சீவி நறுக்கியது)
முந்திரி 10
பாதாம் 10
ஏலக்காய்ப் பொடி 2 சிட்டிகை
நெய் 3 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர், பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து, பின் குக்கரில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் கற்றாழையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். பின்னர், பாதாம், ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கற்றாழை பருப்புப் பாயாசம் தயார்.