தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கற்றாழை பருப்புப் பாயாசம்

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர், பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து

News image
Updated On :22 அக்டோபர் 2023, 1:05 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்


தேவையான பொருள்கள் :

பாசிப்பருப்பு  1 கிண்ணம்
துருவிய வெல்லம்  2 கிண்ணம்
காய்ச்சிய பால்  2 கிண்ணம்
கற்றாழை  2 (தோல் சீவி நறுக்கியது)
முந்திரி  10
பாதாம்  10
ஏலக்காய்ப் பொடி  2 சிட்டிகை
நெய்  3 தேக்கரண்டி

செய்முறை : 

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர்,  பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து, பின் குக்கரில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் கற்றாழையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.  பின்னர்,  பாதாம், ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கற்றாழை பருப்புப் பாயாசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.