தேவைப்படும் பொருள்கள்:
ரவை அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
எண்ணெய் 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு, தேவையான அளவு
கடுகு கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் கால் தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் ஒரு கிண்ணம் தண்ணீர்விட்டு ரவை, உப்பு சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் கெட்டியாகக் கிளறி இறக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ரவை கலவையை சிறு உருண்டைகளாகத் தட்டிப் போட்டு இரண்டு புறமும் எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். ரவா உப்புமா சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு இந்த ரவா அடை வித்தியாசமான சுவையில் ஈர்க்கும்.