தேவையான பொருள்கள்:
உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
எண்ணெய்- 5 மேசைக் கரண்டி
ஏலக்காய், கிராம்பு- 2
பட்டை- சிறு துண்டு
பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர்- தலா கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
சதுரங்களாக அரிந்த பனீர்- அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள், கரம் மசாலா- தலா 2 மேசைக் கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும், உதிரியான சாதம் சேர்த்து கலந்து, சூடாகப் பரிமாறவும்.