

தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து- தலா அரை கிண்ணம்
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு- தலா 1 மேசைக்கரண்டி
சீரகம், மிளகு, சுக்குப் பொடி, தயிர்- கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
முந்திரிப் பருப்பு- 10
நெய்- 2 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்
செய்முறை:
அரிசிகள், பருப்பை ஒன்றாக ஊற வைத்து, தேவையான அளவு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும், தயிர் சேர்த்து கலக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். சிறிய கிண்ணங்களில் நெய் தடவவும். மீதமுள்ள உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். சுக்குப் பொடி சேர்த்து கலந்து மூடி வைக்கவும்,. ஒரு மணி நேரம் கழித்து, மாவை கிண்ணங்களில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.