தேங்காய் தோசை

அரிசியை தனியாகவும், உளுத்தம் பருப்பை தனியாகவும் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

தேங்காய் 1
புழுங்கலரிசி 250 கிராம்
உளுத்தம் பருப்பு 100 கிராம்
பச்சை மிளகாய் 6
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

அரிசியை தனியாகவும், உளுத்தம் பருப்பை தனியாகவும் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். அரிசி, உளுந்து, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து தோசைக்கல் அடுப்பில் வைத்து மாவை பரவலாக ஊற்றி, இருபுறமும் சிறிது எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு வேகவிட்டு, தோசையை வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com