தேவையான பொருள்கள் :
சோள ரவை- கால் கிலோ
நறுக்கிய காய்கறிகள்- 1 கிண்ணம்
வெங்காயம்- அரை கிண்ணம்
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு- சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், காய்கறிகளைப் போட்டு வதக்கவும். அதன்பின்னர், ரவையை அதனுடன் போட்டு வறுத்து ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.தேவையான அளவு உப்பு போட்டு, மிதமான தீயில் மூடி வைத்து நன்கு வெந்ததும் எலுமிச்சைச்சாறு விட்டு கொத்தமல்லித் தழையைப் போட்டு இறக்கவும். சுவையான சோளமாவு உப்புமா தயார்.
-, கோடம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



