நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மேங்கோ மலாய் கேக்

மாம்பழங்களைச் சுத்தம் செய்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 12:02 am IST

தேவையான பொருள்கள்:

கேக் செய்ய..:

பால்- 2 கிண்ணம்

மாம்பழம்- 3 தோல் நறுக்கியது

சர்க்கரை- 4 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார்- 3 தேக்கரண்டி

மலாய், துருவிய ஒயிட் சாக்லெட், தேங்காய்த் துருவல் டெசிகேடட்- தலா 2 தேக்கரண்டி

பிஸ்கட்- 15

பொடியாக நறுக்கிய பிஸ்தா- தேவையான அளவு

செய்முறை:

மாம்பழங்களைச் சுத்தம் செய்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். துண்டுகளைக் கூழாக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் பால், சர்க்கரை, சோளமாவு போட்டு நன்கு கலக்கவும்.

கட்டியில்லாமல் கலந்து இந்தக் கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, நன்றாகக் கிளற வேண்டும். சற்று தளர்வாக இருக்கும்போது, அடுப்பை அணைத்துவிடவும். கலவை சற்று ஆறியதும் அதனுடன் மலாய் கிரீமை சேர்க்கவும். இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, சற்று ஆறியதும் மாம்பழக் கூழை சேர்த்து வைக்கவும்.

ஒரு கண்ணாடி பௌலில் முதலில் தூளாக்கிய பிஸ்கெட்டை பரப்பவும். அதன் மீது மாம்பழக் கலவையைப் பரப்ப வேண்டும். தேங்காயத் துருவல் தூவி, மறுபடியும் ஒரு லேயர் இழை இரண்டையும் போட்டு, இதன் மேல் துருவிய ஒயிட் சாக்லெட், மாம்பழத் துண்டுகள், பொடித்த பிஸ்கெட், பிஸ்கட் தூள் பரவலாகத் தூவி ஃப்ரிஜ்ஜில் செட் செய்யவும். நன்றாக செட் ஆனவுடன் பரிமாற சுவையான மேங்கோ கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.