அங்கே ஓடுது
அணில் பிள்ளை
அதற்கு கொஞ்சமும்
பொறுப்பில்லை!
இங்கே கனிகள்
மரங்களிலே
இனிப்பாய் கனிந்ததை
மறந்தனவே!
திங்காதிருந்தால்
ருசியில்லை -அது
தின்பதைப் பார்த்தால்
பசியில்லை!
எங்கே ஓடுது
அணில் பிள்ளை
ஏனோ அதற்கு
பொறுப்பில்லை!
குண்டு மணிகளோ
அதன் கண்கள்
குஞ்சம் போலவே
அதன் வாலாம்!
கண்டு மகிழ்ந்திட
அணில் பிள்ளை
கிடைக்கும் சுகம்
அளவில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.