
கோடை காலம் வந்தது
கொடிய வெப்பம் தந்தது
ஆடை களைந்த போதிலும்
ஆளை நனைக்கும் வியர்வையே!
ஓடை போல கானலும்
ஓடும் நீரைப் போலவே
தாரை உருக்கிப் போகுதே
தரையில் நடக்க இயலுமோ!
மேடை போட்ட பசுமையாய்
மெலிந்து வளர்ந்த புல்வெளி
மேலை வெப்பம் தீய்த்ததே
மேலும் வறட்சி காய்த்ததே!
கூடை நிறைய பூக்களும்
குளிர்ந்து மகிழும் மழையதும்
கூடி வந்து சேருமோ
கோடை கொடுமை மாறுமோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.