

1. உண்மை உள்ளவன் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
2. உள்ளத்தின் தூய்மையே உண்மையான அழகு!
3. எல்லாச் சுயசரிதைகளும் சரித்திரமாவதற்கு ஏற்றவை அல்ல!
4. தியானத்திற்கும் தெய்வச் சிந்தனைக்கும் ஏற்ற சூழ்நிலை அவசியம்.
5. எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக்குறையே பெரியதாகத் தோன்றும்.
6. கடமையை முன்னிட்டுச் செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
7. "நான்' என்ற அகந்தையைப் போக்கி விடுவதுதான் அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள்.
8. மனத்தூய்மை இல்லாதவர் என்றுமே கடவுளை அறியவோ, அடையவோ முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.