தமிழ்த்தாத்தா!
ஓலைச்சுவடிகள் வடிவத்தில்ஒல்காப் புகழ்த் தமிழ் இலக்கியங்கள்மூலை முடுக்குகளில் பரணில்முடங்கிக் கிடந்த காலத்தில்


ஓலைச்சுவடிகள் வடிவத்தில்
ஒல்காப் புகழ்த் தமிழ் இலக்கியங்கள்
மூலை முடுக்குகளில் பரணில்
முடங்கிக் கிடந்த காலத்தில்
அவற்றைத் தேடி ஓர் அறிஞர்
அலைந்து திரிந்தார் ஊர் ஊராய்
அவர் யார் என நீ அறிவாயா?
அருமைத் தம்பி! செல்வேன் கேள்!
பத்துப்பாட்டும் நற்சிலம்பும்
பார்புகழும் புறநாநூறும்
முத்து முத்தாய் அச்சிட்டு
முதலில் அவர்தான் வெளியிட்டார்!
சீவக சிந்தா மணிநூலை
சிறப்புற அவரே பதிப்பித்தார்!
கோவை அந்தாதி யெனவே
கொடுத்தார் பலவும் அச்சிட்டே!
அவர்போல் தமிழ்தொண் டாற்றியவர்
யாருளர்? தமிழ் மொழி வரலாற்றில்
அவர்தான் தம்பி! தமிழ்த்தாத்தா!
அகிலம் புகழும் உ.வே.சா!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...