92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தீர்க்க தரிசனம்!

மராட்டிய வீரர் சிவாஜி ஒரு சமயம் தன் குருவாகிய ராமதாசருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார்.

News image
Updated On :31 ஜூலை 2015, 2:44 pm

த.சீ.பாலு

மராட்டிய வீரர் சிவாஜி ஒரு சமயம் தன் குருவாகிய ராமதாசருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். ராமதாசர் அவற்றைப் பெற்றுக்கொண்டு பதிலுக்குக் கையளவு மண், சில கூழாங்கற்கள், கொஞ்சம் குதிரைச் சாணம் ஆகியவற்றைச் சிவாஜிக்குக் கொடுத்தனுப்பினார்! அவைகளைப் பார்த்த சிவாஜியின் அன்னை சினம் அடைந்தார்!

அப்போது சிவாஜி, ""அம்மா இவையெல்லாம் குருதேவரின் தீர்க்க தரிசனத்தைக் காட்டுகின்றன.'' என்றார்!

""எப்படி?'' என்று கேட்டார் சிவாஜியின் அம்மா.

அதற்கு சிவாஜி, ""இந்த மண் மொகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் ஜெயிப்பேன்..என்பதைக் குறிக்கிறது. கூழாங்கற்கள் வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன்...என்பதைக் காட்டுகிறது...இந்தச் சாணம் எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய பெரிய குதிரைப்படையை அமைப்பேன்...என்பதை உணர்த்துகிறது!''

என்றார்! இதைக்கேட்டு வியந்தார் அன்னை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.