புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பாவை!

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்சுந்தரத் தமிழில் சொல்லெடுத்துப்

News image
Updated On :29 டிசம்பர் 2017, 6:30 pm

நா. இராதாகிருட்டிணன்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
சுந்தரத் தமிழில் சொல்லெடுத்துப்
பாடித் தொடுத்த பாமாலை
பைந்தமிழ் மணக்கும் பூமாலை!

நாடி வருவோர்க் கருள் சொரியும்
நாரணன் புகழை நமக்குரைக்கும்
வாடா தென்றும் தமிழமுதை
வாரியே வழங்கும் திருப்பாவை!

ஆண்டாள் என்னும் தமிழ்ப்பாவை
அழகாய் வடித்த திருப்பாவை
அவளோ தமிழின் மாமேதை!
அள்ளித் தந்தாள் இறையமுதை!

எழுச்சித் தமிழின் சொற்கொண்டு
எழுதி வழங்கிய கற்கண்டு!
பிழயறு மாலவன் திருவருளைப்
பேசும் நல்ல பூச்செண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.