புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குளம்

குளத்தைச் சுற்றி நான்கு கரைகள்மரங்களோடு திகழ்ந்திடும்!

News image
Updated On :2 ஜூன் 2018, 6:18 am

அழகு இராமானுஜன்

குளத்தைச் சுற்றி நான்கு கரைகள்
மரங்களோடு திகழ்ந்திடும்!
உளத்தைக் கவரும் தாமரைகள் 
தினமும் பூத்துக் கமழ்ந்திடும்!

உறங்கி விழிக்கும் கிராம மக்கள் 
குளத்தை நோக்கி வருவரே!
இறங்கி ஏறத் துறைகளுண்டு 
குளித்துக் களித்துத் திரும்புவர்!

களையைப் பறித்து பயிரைக் காக்கும் 
உழவர் குடியின் மக்கள் போல்
அலையில் நீந்தி அழுக்கை மேய்ந்து 
நீரைக் காக்கும் மீன்களே!

தனது நலத்தில் நீரின் நலத்தைக் 
காத்து வாழும் மீன்கள் போல்
உனது நலத்தில் ஊரின் நலத்தைக் 
காத்து மகிழ்க சிறுவனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.