ஒரு மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது! சொற்பொழிவு செய்தவர் ஒரு இடத்தில் ""நாலு பேர் மெச்ச வாழவேண்டும்!'' என்ற அறிவுரையைச் சொன்னார். எல்லோரும் மனமுருகக் கேட்டுக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் எழுந்தார். அவர் சொற்பொழிவாளரிடம், ""நாலு பேர்....,நாலு பேர்....என்கிறார்களே அந்த நாலு பேர் யார்? தெருவில் வசிப்பவர்களா?'' என்று கேட்டார்.
சொற்பொழிவாளர் சிரித்துக் கொண்டே , ""நம் வாழ்க்கையில் உள்ள மிக முக்கியமானவர்கள் அவர்கள்!...நீங்களே அவர்கள் யாரென்று சற்று யோசியுங்கள்....'' என்றார்.
கூட்டத்தில் சலசலப்பு! சிலர் தங்கள் எஜமானர்கள், என்றனர். சிலர் தங்கள் வேலைக்காரர்கள் என்றனர்..... சிலர் ஊரிலுள்ள சில பெரியவர்கள் என்றனர். சிலரோ கல்வியாளர்கள் என்றனர்.
கூட்டத்தில் யார் அந்த நாலு பேர்? என்ற குரல்கள் ஆங்காங்கே கேட்டது!
சொற்பொழிவாளர் மறுபடியும் புன்னகையோடு, ""இது ரொம்ப சுலபம்! நாம் வணங்கக் கூடிய மிக முக்கியமானவர்கள் அவர்கள்! அவர்கள் நம் தாய், தகப்பன், குரு, மற்றும் தெய்வம்! ''
""இந்த நாலுபேருக்குப் பிடித்தமாக நாம் நடந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லையா? இதைத்தானே மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறுகின்றனர்'' என விடையைக் கூறி முடித்தார் சொற்பொழிவு செய்தவர்!
கூட்டத்தில் பலத்த ஆரவாரம்!
அந்தச் சொற்பொழிவாளர்தான் திருமுருக கிருபானந்த வாரியார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



