இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முத்துக் கதை!: துணைக்கு வந்த கடவுள்!

இங்கிலாந்தில் வசித்த ஒரு பெண்மணி கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார்.

News image
Updated On :21 டிசம்பர் 2019, 4:01 pm

மயிலை மாதவன்

இங்கிலாந்தில் வசித்த ஒரு பெண்மணி கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அந்த விண்ணப்பத்தில் தங்கள் ஊரில் ஓர் அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். கவர்னரோ அந்தப் பெண்மணிக்கு ஒரு இடத்தை ஒதுக்கினார். ஆனால் என்ன துரதிர்ஷ்டம்! அனாதை விடுதிக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடம் பாறைகள் சூழ்ந்த இடமாக இருந்தது.

சமூக அக்கறை மிகுந்த, இறை நம்பிக்கை அதிகமாயிருந்த அந்தப் பெண்மணிக்கு இது குறித்துக் கவலையாக இருந்தது. ஏனென்றால் பாறைகளை உடைத்து அங்கு கட்டடம் கட்டுவதற்கு மிக அதிகமாகச் செலவு ஆகும்போல் இருந்தது. அந்தப் பெண்மணியுடன் இருந்தவர்கள் மிகவும் சோர்வுற்று திட்டத்தைக் கைவிடலாம் என அறிவுறுத்தினர். ஆனால் பெண்மணி தளரவில்லை. இறைவனிடத்தில் அந்தப் பெண்மணிக்கு தீவிர விசுவாசம் இருந்தது. கர்த்தரின் படத்தை வைத்துக்கொண்டு தீவிரமாகப் பிரார்த்தனை செய்தார்.  

 சில நாட்கள் கழிந்தன. 

ஒரு ஒப்பந்ததாரர் அந்தப் பெண்மணியைச் சந்தித்தார். 

ஒப்பந்தக்காரர் அந்தப் பெண்மணியிடம், ""சகோதரி!.... நான் புதிதாகக் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? நீங்கள் கேட்கும் தொகையை நான் உங்களுக்குத் தருவேன்!'' 
 அந்தப் பெண்மணிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது! உடனே சம்மதித்தார். அதனால் பெருந்தொகை அந்தப் பெண்மணிக்குத் தரப்பட்டது! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் கடவுள் அவரது பிரார்த்தனைக்குச் செவி சாய்த்துவிட்டார். கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு விடுதியையும் வெற்றிகரமாகக் கட்டி முடித்துவிட்டார். துணைக்கு வந்த கடவுளின் கருணையை நினைத்து அவர் கண்களில் நீர் திரண்டது! இறைவனுக்கு நன்றி கூறிப் பிரார்த்தனையைத் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.