இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

யார் பெரியவர்?: முத்துக் கதை!

ஒரு யானைக்கும் வாலில்லாக் குரங்குக்கும் தங்களுள் யார் பெரியவர் என்று போட்டி எழுந்தது. அவை இரண்டும் ஓக் ஆந்தையிடம் சென்றன. தங்களில் யார் சிறந்தவர் என்று கேட்டன. 

News image
Updated On :12 ஜனவரி 2019, 7:41 am

மயிலை மாதவன்

ஒரு யானைக்கும் வாலில்லாக் குரங்குக்கும் தங்களுள் யார் பெரியவர் என்று போட்டி எழுந்தது. அவை இரண்டும் ஓக் ஆந்தையிடம் சென்றன. தங்களில் யார் சிறந்தவர் என்று கேட்டன. 

அதற்கு ஆந்தை, ""நான் ஒரு போட்டி வைப்பேன்!..... அந்தப் போட்டியில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்தான்  பெரியவர்!...''

என்றது.

""என்ன போட்டி?...கொஞ்சம் விவரமாய்ச் சொல்லேன்!...'' என்றது குரங்கு.

""இதோ எதிரிலுள்ள ஆற்றைக் கடந்து எதிர்க்கரையிலுள்ள மாமரத்திலிருந்து மாம்பழம் பறித்து வர வேண்டும்....''

யானையும், குரங்கும் ஆற்றைப் பார்த்தன. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. யானையால் கடந்து விட முடியும்!...ஆனால் குரங்கால் முடியாது!.... இருப்பினும் யானை குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. அழகாக ஆற்றைக் கடந்து விட்டது.  இரண்டும் மாமரத்தை அடைந்தன. மாம்பழங்களோ மிகவும் உச்சியில் மட்டுமே இருந்தன. யானையால் மரம் ஏற முடியுமா?....பெருமூச்சு விட்டது. ""கவலைப் படாதே நண்பா!...'' என்ற குரங்கு விறுவிறுவென்று மரத்தின் மீது ஏறியது. பழங்களைப் பறித்துக் கொண்டு வந்துவிட்டது. சில பழங்களை யானையிடம் கொடுத்தது. தானும் கொஞ்சம் வைத்துக் கொண்டது. முன்போலவே யானை குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. இரண்டும் கம்பீரமாக ஆந்தை இருக்கும் கரையை நோக்கி வந்தது! இரண்டும் ஆந்தையிடம் பழங்களைக் கொடுத்தன.

ஆந்தை இந்த ஒற்றுமை நிறைந்த விலங்குகளை மகிழ்ச்சியோடு பார்த்தது.  

""நீங்கள் இருவருமே சிறந்தவர்கள்தான்!... ஒருவர்க்கு ஒருவர் ஒத்துழைத்துப் பழங்களைப் பறித்து வந்துவிட்டீர்கள்!....சபாஷ்!....'' என்றது.

யானையும் குரங்கும் காட்டிற்குள் பழங்களைச் சாப்பிட்டவாறே சந்தோஷத்துடன் நடந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.