இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
விவேகானந்தர்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்!
ஸ்ரீஅன்னை
போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை.
சாரதாதேவி
நல்ல சொற்களைப் பேசத் தெரியாதவன் ஊமை. நல்லவற்றைக் கேட்காதவன் செவிடன்.
ஆதிசங்கரர்
தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் ரகசியம்!
காந்தியடிகள்
உயர்ந்த தவம் பொறுமை. உயர்ந்த ஆயுதம் மன்னிப்பு. உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி.
குருநானக்
யாரிடத்தில் இரக்கம் அதிகப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.
வள்ளலார்
அமைதியைவிட மேலான ஆனந்தம் வேறெதுவும் இல்லை.
புத்தர்
அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் ஆண்டவனை நேசித்தவனாகிறான்.
புட்டபர்த்தி சாய்பாபா