பெருந்தன்மை என்பது நற்குணங்களின் ஆபரணமாகும்.
- அரிஸ்டாட்டில்
நம் அறிவுத் திண்மையும், செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலேயே.
- எமர்சன்
நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் செய்யப்பட்ட கலைவடிவங்களில் கூட திறன்கள் மறைந்தே இருக்கும்.
- ஓவிட்
இசையோ, சித்திரமோ, சிலையோ, வடிவமைப்போ எதுவாகிலும் சரி, கலை வடிவங்கள் ஆன்மிக அழகைப் புலப்படுத்துதே!
- சால்வடார்
ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உறவாடும் சங்கேத மொழியே கலையாகும்!
- ஜான் ரஸ்கின்
பொருள் இருக்கும்வரை மண்ணுலகில் மதிப்பு. புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகத்தில் மதிப்பு.
- பகவத் கீதை
நீங்கள் கடமையைச் செய்யும்போதே உங்கள் தகுதி தெரிந்துவிடும்.
- கதே
வீரனைவிட, கோழைதான் சச்சரவு நிறைந்தவனாக இருப்பான்.
- ஜெஃபர்சன்
அன்பில்லாத மொழி வெறும் இரைச்சலே.
- பைபிள்
மெழுகுவர்த்தி ஒளியைக் கொடுக்கிறது. நண்பர்களுக்கும்... பகைவர்களுக்கும்!
- எட்னா செயின்ட் வின்சென்ட்