மனிதன் தன் வயிற்றைப் பிராணிகளின் பிரேதக் குழியாக்குவது நல்லதன்று.
- அக்பர்
அறிவு வளர, வளர உணர்ச்சிகள் பண்பட்டு நுட்பம் அடைகின்றன.
- மு . வரதராசனார்
அன்பின் மூலமாகவே ஆனந்தத்தைப் பெருக்க முடியும்.
- சத்ய சாயி
பூக்கள் வண்ணங்களோடு மணம் பரப்பவும், பறவைகள் சுதந்திரத்தோடு சங்கீதம் பாடவும், மனிதன், உயிர்களை நேசித்து அன்பு செலுத்தவும் படைக்கப்பட்டுள்ளான். இவைகளால் உலகில் பிரகாசமும், மணமும், சாந்தியும் ஏற்படுகின்றன.
- ஜீன்மாரி வியன்னே
ஆன்மாவின் வலிமையை சோதித்துப் பார்க்கவே பிறவிகள் ஏற்படுகின்றன.
- பிரெளனிங்
உறுதியான நம்பிக்கைக்கு இறைவன் துணையிருப்பார். இயற்கையின் எல்லா சக்திகளும் நமக்குத் துணையாயிருக்கும்!
- ஜேம்ல் ஆலென்
இறைவன் பஞ்சைக் கொடுப்பார். நாம்தான் அதைத் துணியாக நெய்ய வேண்டும்.
- எபிகுரூஸ்
செய்த தவற்றை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு ஒப்பாகும்.
- தாமஸ் புல்லர்
செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வந்தன். வரவுக்கு மேல் செலவு செய்பவன் ஏழை. அவ்வளவுதான்.
- புருவெர்
அறியாமையிலிருந்து அச்சமும் தோன்றுகிறது.
- எமர்சன்