நூல் புதிது!

குழந்தைகளுக்கான 21 பாடல்! அத்தனையும் அற்புதம்! எடுத்துக்காட்டுக்குச் சில வரிகள், பள்ளித் தலமனைத்தும் என்ற முதல் பாடலிலேயே, "சின்னஞ் சிறுவர் கூடுமிடம், சிந்தை மகிழ்ந்து கற்குமிடம்,.... அன்னை தந்தை
நூல் புதிது!

எண்ணச் சிறகுகள்

பாடலாசிரியர் - சி.பாலையா
பக்கம் - 32
விலை - ரூ 30/-

குழந்தைகளுக்கான 21 பாடல்! அத்தனையும் அற்புதம்! எடுத்துக்காட்டுக்குச் சில வரிகள், பள்ளித் தலமனைத்தும் என்ற முதல் பாடலிலேயே, "சின்னஞ் சிறுவர் கூடுமிடம், சிந்தை மகிழ்ந்து கற்குமிடம்,.... அன்னை தந்தை அன்போடு ஆசான் அறிவும் சேருமிடம்!' என்ற வரிகளும்,  "உழைப்பாளியின் குரல்'  என்ற பாடலில், "படிப்பறிவு இல்லாமலே பாவப்பட்டுப் போனோமம்மா..... உழைக்கின்ற மக்கள் நாம உயர்வு பெற வேணுமம்மா..... என்ற வரிகள் சிந்தனையைத் தூண்டுபவை. புத்தகம் சிறுவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியோருக்கும் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது. வெளியிட்டோர் - நானிலம் பதிப்பகம், ஆசைத்துரை இல்லம், சந்தை வீதி, பொன்னமராவதி, புதுக்கோட்டை. செல்லிடப்பேசி - 9443575610

குழந்தைகளுக்கு நல்ல கதைகள்

ஆசிரியர் - எ.சோதி
பக்கம் - 40
விலை - ரூ 60/-
நூலாசிரியர் எ.சோதி பல்லாண்டுகளாக சிறுவர்களுக்கு ஏற்ற  படைப்புகளை வழங்கி வருபவர். திருடன்! திருடன்! பிடியுங்கள்!,.. மந்திரக் குவளை,.. நல்ல செயல்! நல்ல பயன்!,.. முதலிய 12 குட்டிக் கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணப்படங்களுடன் ஆர்ட் பேப்பரில் மிகச் சிறப்பாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. எடுத்தால் கீழே வைக்க இயலாது! அவ்வளவு சுவாரசியம்! வெளியிட்டோர் - நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605003. செல்லிடப்பேசி - 9345450749.


வனதேவதையின் பச்சைத் தவளை

(சிறுவர்களுக்கான பொது அறிவுக் கதைகள்)
ஆசிரியர் - கன்னிக்கோவில் ராஜா
பக்கம் - 80
விலை - ரூ 85/-

குழந்தைளுக்கான படைப்புலகில் கன்னிக்கோவில் ராஜா, மிகப் பிரபலமானவரும், இளம் வயதிலேயே மிகுந்த இலக்கிய அனுபவமும் கொண்டவர். அப்பாவின் பாசத்துகேங்கும் சிங்கக்குட்டிகள்!..... கேள்விகளால் குழம்பும் ஒட்டகச்சிவிங்கி!,..... சிறுத்தையைச் சீண்டிப் பார்த்த நரி!,.... முதலிய 9 கதைகளின் தொகுப்பே இந்த நூல்! விலங்குளின் வாழ்க்கை அவற்றின் இயல்பு, திறன்கள், தனித்துவம் ஆகியவற்றை கதைகள் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மிக சுவாரசியமான புத்தகம்! வெளியிட்டோர் - வாசகசாலை பதிப்பகம், 80, ஸ்ரீசத்ய சாயி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600073. செல்லிடப்பேசி -(91+) 9942633833

பூஞ்சிட்டுக்குப் புதுப்பாட்டு

(குழந்தைப் பாடல்கள்)
ஆசிரியர் - சிவகாசி பா . செந்திலிங்கம்
பக்கம் - 128
விலை - ரூ 100
கதைப்பாடல்கள், தெய்வப் பாடல்கள், இயற்கையை ரசிக்கும் பாடல்கள், மொழியைப் போற்றும் பாடல்கள்! திறன் வளர்க்கும் பாடல்கள்! அனைத்தும் எளிய தமிழில் சிறுவர்களுக்கு!  100 பாடல்கள்! அனைத்தும் தித்திக்கும் சந்தத்துடன் சிறப்பாய் எழுதப்பட்டுள்ளன. புத்தக வடிவமைப்பு நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது! தவறாமல் படித்துப் பாட வேண்டிய பாடல்கள்! வெளியிட்டோர் - வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600017. தொலைபேசி - 044 - 24342810

காட்டுக்குள்ளே  கவிதைப் போட்டி


ஆசிரியர் - கொ.மா.கோதண்டம்
பக்கம் - 56
விலை - ரூ 90/-
ஆசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. பல ஆணடுகளாக வனப்பகுதிக் கதைகளை சுவைபடச் சொல்லுவதில் வல்லவர். அவரது நீலன் கதாபாத்திரத்தை அறியாத வாசகர்களே இருக்க முடியாது. பறவைக் காடு, அழகு வனம், இருதலை மான், இரக்கப்பட வேண்டும் பாப்பா....முதலான 10 கதைகளின் தொகுப்பு இந்த நூல்! அனைத்தும் சிறுவர்களை வனத்தினுள் அழைத்து அதன் அழகையும், அங்கு வாழும் பறவைகள் விலங்குகள் பற்றிய சுவையான தகவல்களும் கதை வடிவில் சொல்லப்பட்டுள்ளன. வனத்தின் சிறப்பையும், அழகையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். 

எமாற்றினால் ஏமாறுவாய்

(சிறுவர் கதைகள்)
ஆசிரியர் கொ.மா.கோதண்டம்
பக்கம் - 56
விலை - ரூ 90/-
விலங்குகளைக் கதைமாந்தர்களாக்கி வடிக்கப்பட்ட 10 கதைகள்! அனைத்தும் சுவாரசியமாகவும், எளிமையாகவும், சுவையுடனும் குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறனை போதிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளன. ரசித்துப் படிக்க வேண்டிய புத்தகம். மேற்கண்ட இரு நூல்களையும் வெளியிட்டோர் - கோரல் பப்ளிஷர்ஸ் அண்டு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், எண் 8,  6-ஆவது கிராஸ் தெரு, 8 - ஆவது மெயின் ரோடு, திருமுல்லைவாயில், சென்னை - 600109. செல்லிடப்பேசி - 9043050699.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com