நிம்மதியாகப் படுத்தவுடன் உறங்குவாய். அதிகாலை சுறுசுறுப்பாய் எழுந்திருப்பாய்.
-யஜுர் வேதம்
ஏழைகளை நேசிக்கக் கற்றுக்கொள்ளுதல் ஆன்மிகத்தின் விளைவு ஆகும்.
- போப்
ஒழுக்கமாக ஜீவிப்பவனின் போதனைகள் சக்தி வாய்ந்தது.
- செர்வான்டஸ்
மற்றவர்களிடம் நாம் செலுத்தும் தோழமை உணர்வே சாதனை செய்யத் துணை புரியும்.
- இந்திரா காந்தி
சக்தியுள்ள சொற்கள் அதிகமான பொருளடக்கம் உள்ளவை.
-எஸ்ரா பவுண்ட்
நல்ல கவிஞனின் இதயத்தில் தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
- வேர்ட்ஸ் வொர்த்
பூட்டியிருக்கும் இதயங்களைக் கூட அன்பு சாவியின்றித் திறந்து விடுகிறது.
-யாரோ
விசாலமான எண்ணங்களில் மானுடம் இளைப்பாறுகிறது
- யாரோ
அறநெறியே மனித குலத்தின் விலை மதிப்பில்லாத சொத்தாகும்
- ஹென்ரி ஆடம்ஸ்
மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரும் வெற்றியை அடைய முடியாது.
- அப்துல் கலாம்