ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் அரசியல் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆச்சார்ய கிருபளானி ஆப்பிள் பழங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து நேருவுக்குக் கொடுத்தார்.
நேருவோ ஆப்பிள் பழத்தோலைச் சீவிக் கீழே போட்டுவிட்டு பழத் துண்டுகளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
நேரு இப்படிச் செய்வதை கிருபளானி பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். "ஆப்பிள் பழத் தோல்களை இப்படி சீவிச் சீவி வீணடித்து விட்டீர்களே! அந்தத் தோலில்தானே வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. நம்மில் பலர் சத்தானதை விட்டுவிட்டு சக்கையை மட்டுமே உண்ணுகிறார்கள்' என்று கூறினார்.
நேருவோ கீழே விழுந்துகிடந்த பழத்தோல்களை எல்லாம் பொறுமையுடன் எடுத்து "இந்த முறை எனக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விட்டது. இனிமேல் பழங்களைச் சாப்பிடும்போது தோல்களையும் சேர்த்து சாப்பிடுகிறேன். இப்போது எனக்குக் கிடைக்காத இந்த சத்துக்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டுமே... இதைச்சாப்பிடுங்கள்' என்று கூறி, பழத்தோல்கள் நிறைந்த தட்டை கிருபளானியிடமே திருப்பிக் கொடுத்தார் நேரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


