விடுகதைகள்

உணவு கொடுத்தால் வளரும், நீர் கொடுத்தால் அழியும்.
விடுகதைகள்
Published on
Updated on
1 min read


1.உணவு கொடுத்தால் வளரும், நீர் கொடுத்தால் அழியும்.
2.இதயம் போல துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்.
3.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான்.
4.வெயிலில் மலரும், காற்றில் உலரும்.
5.வேகாத வெயிலில் வெள்ளையப்பான் விளைகிறான்.
6.கழுத்து உண்டு தலையில்லை, உடல் உண்டு உயிர் இல்லை, கை உண்டு விரல்கள் இல்லை.
7.ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது.
8.ஆறெழுத்து உலோகம், கடைசி மூன்றெழுத்து கொத்தும்.
9.அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு.


விடைகள்

1. நெருப்பு
2.  கடிகாரம்  
3. புகை  
4.  வியர்வை  
5.  உப்பு  
6.  சட்டை
7.  கொடி  
8.  துத்தநாகம் 
9.  முட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com