சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தை
களின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.
அமெரிக்க நூல்களில் எழுத்தாளர் சந்திப்பு மாதம்தோறும் நடக்கிறது. இம்மாத எழுத்தாளர் என்று அவருடைய அறிமுகம் குறித்து, தனி மேசையில் அடுக்கி வைக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க வேண்டிய நூல்கள் என்று வயதுவாரியாக, தனித்தனியே குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1950-இல் தொடங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்துக்கு முதன்முதலில் தலைவராக இருந்தவர் வை.கோவிந்தன்.
"குழந்தைகள் செய்தி' எனும் தினப்பத்திரிகையை முதன் முதலில் சிறுவர்களுக்காக நடத்தியவர் சக்தி வை.கோவிந்தன். குழந்தைகளுக்கான முதலும், கடைசியுமான தினசரியும் அதுதான்.
கே.என்.சிவராஜ பிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை ஆகியோர் இணைந்து "சிறுபாமாலை' எனும் பெயரில் குழந்தைப் பாடல் தொகுப்பை முதலில் வெளியிட்டனர்.
தமிழில் முதல் சிறுவர் இதழான "பால தீபிகை' 1840-இல் வெளியிடப்பட்டு,
22 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது.
சுதந்திரத்துக்கு முன்பே புதுக்கோட்டையில் வெ.சுப.நடேசன் "டமாரம்' எனும் சிறுவர் இதழை நடத்தினார். விலை கால் அணா. அப்போதே 20 ஆயிரம் பிரதிநிதிகள் விற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



