சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தை
களின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.
அமெரிக்க நூல்களில் எழுத்தாளர் சந்திப்பு மாதம்தோறும் நடக்கிறது. இம்மாத எழுத்தாளர் என்று அவருடைய அறிமுகம் குறித்து, தனி மேசையில் அடுக்கி வைக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க வேண்டிய நூல்கள் என்று வயதுவாரியாக, தனித்தனியே குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1950-இல் தொடங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்துக்கு முதன்முதலில் தலைவராக இருந்தவர் வை.கோவிந்தன்.
"குழந்தைகள் செய்தி' எனும் தினப்பத்திரிகையை முதன் முதலில் சிறுவர்களுக்காக நடத்தியவர் சக்தி வை.கோவிந்தன். குழந்தைகளுக்கான முதலும், கடைசியுமான தினசரியும் அதுதான்.
கே.என்.சிவராஜ பிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை ஆகியோர் இணைந்து "சிறுபாமாலை' எனும் பெயரில் குழந்தைப் பாடல் தொகுப்பை முதலில் வெளியிட்டனர்.
தமிழில் முதல் சிறுவர் இதழான "பால தீபிகை' 1840-இல் வெளியிடப்பட்டு,
22 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது.
சுதந்திரத்துக்கு முன்பே புதுக்கோட்டையில் வெ.சுப.நடேசன் "டமாரம்' எனும் சிறுவர் இதழை நடத்தினார். விலை கால் அணா. அப்போதே 20 ஆயிரம் பிரதிநிதிகள் விற்றன.