விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

குழந்தைகள் இலக்கியம்...

சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.

Published On :


சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தை
களின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.

அமெரிக்க நூல்களில் எழுத்தாளர் சந்திப்பு மாதம்தோறும் நடக்கிறது. இம்மாத எழுத்தாளர் என்று அவருடைய அறிமுகம் குறித்து, தனி மேசையில் அடுக்கி வைக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க வேண்டிய நூல்கள் என்று வயதுவாரியாக, தனித்தனியே குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1950-இல் தொடங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்துக்கு முதன்முதலில் தலைவராக இருந்தவர் வை.கோவிந்தன். 

"குழந்தைகள் செய்தி' எனும் தினப்பத்திரிகையை முதன் முதலில் சிறுவர்களுக்காக நடத்தியவர் சக்தி வை.கோவிந்தன்.  குழந்தைகளுக்கான முதலும், கடைசியுமான தினசரியும் அதுதான்.

கே.என்.சிவராஜ பிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை ஆகியோர் இணைந்து "சிறுபாமாலை' எனும் பெயரில் குழந்தைப் பாடல் தொகுப்பை முதலில் வெளியிட்டனர்.

தமிழில் முதல் சிறுவர் இதழான "பால தீபிகை' 1840-இல் வெளியிடப்பட்டு, 
22 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது.

சுதந்திரத்துக்கு முன்பே புதுக்கோட்டையில் வெ.சுப.நடேசன் "டமாரம்' எனும் சிறுவர் இதழை நடத்தினார்.  விலை கால் அணா. அப்போதே 20 ஆயிரம் பிரதிநிதிகள் விற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.