உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரிஞ்சுக்கோங்கோ...

தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது. தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.

Published On :

தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது.

தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.

-எம்.ரவீந்திரன், திருமருகல்.

எண்ணங்களின் எழுச்சி வாழ்க்கை தரும் மகிழ்ச்சி.

மென்மை போக்கே மேன்மை காக்கும்.

தடம் பார்த்து நடப்பவர் மனிதர். வெற்றி வடம் பிடித்து நடப்பவர் மனிதர்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

நல்ல செயல்கள் செய்ய பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். -த.பாலசுப்பிரமணியன், கோவை-4.

சந்தோஷமாக இருக்கும்போது இசை பிடிக்கிறது. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது.

பிரச்னைகளை சவால்களாக ஏற்றால் துணிவு தானே வரும். -கே.அனந்தநாராயணன், மருங்கூர்.

துணிவு உங்களை உழைப்பால் உயர வைக்கும். பணிவு உங்களைப் பிறர் மனதில் உயர வைக்கும். -ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.

எதிரியின் பலம் உன் பலவீனத்தில் இருக்கிறது.

தோல்வி என்பது பெருங்காயம்போல தனியாகச் சாப்பிட்டால் கசக்கும். வெற்றி என்றும் சாம்பாரில் கரைந்துவிட்டால் மணக்கும். -நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

வெற்றி பெறும்போது அவன் என் நண்பன் எனப் பெருமை கொள். தோல்வி அடையும்போது நான் உன் நண்பன் என அவன் அருகில் நில்.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.