டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தங்கச்சி வந்தியா?

காலைக் கதிரவன் செவ்வொளி பாய்ச்சி பவனி வர ஆரம்பித்துவிட்டான். புலவர் அரண்மனைக்குள் நுழைந்தார். நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு ராணி எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையில்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:39 pm

தங்க. சங்கரபாண்டியன்

காலைக் கதிரவன் செவ்வொளி பாய்ச்சி பவனி வர ஆரம்பித்துவிட்டான். புலவர் அரண்மனைக்குள் நுழைந்தார். நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு ராணி எதிரே வந்து கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையில் தங்க நிறச் சிவந்திப் பூக்கள் நிரம்பியிருந்தன. ராணியைக் கண்டதும், ""தங்கச்சி வந்தியா?'' என்றார் புலவர்.

ராணிக்கு முகம் சிவந்துவிட்டது. ""என்ன இது? நம்மை அண்டிப்பிழைக்கும் இவன் நம்மை "தங்கச்சி' உறவுமுறைச் சொல்லி அல்லவா அழைக்கிறான்?'' என்று எண்ணினார் ராணி. கோபம் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுச் சென்றார் ராணி.

புலவர் சென்றதும் ராஜாவிடம் முறையிட்டார் ராணி. ""அப்படியா? உன்னையா தங்கச்சி என்றார். நாளை வரட்டும், கவனிப்போம்'' என்றார் மன்னர்.

மறுநாள் புலவர் வந்தார். ""ஏனய்யா ராணியை "தங்கச்சி வந்தியா?' என்றீராமே அவள் உனக்குத் தங்கையா?'' என்றார் ராஜா.

பதறிய புலவர்,""மன்னா! நான் அழைத்ததே வேறு. "தங்கச் சிவந்தியா' என்பதை "தங்கச்சி வந்தியா' என்று இணைத்துச் சொல்லிவிட்டேன்'' என்றார் புலவர். மன்னர் முகத்தில் அசடு வழிந்தது. மன்னர் ராணியைப் பார்த்தார். ராணி முகத்தில் என்ன வழிந்ததோ? மன்னரைத்தான் கேட்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.