நேரு- 25 பைசா
பெரியார்- 50 பைசா
காந்தி- ரூ.1
அம்பேத்கார்- ரூ.2
சத்யஜித்ரே- ரூ. 3
ஹோமி பாபா- ரூ. 4
இந்திராகாந்தி - ரூ. 5
ராஜீவ்காந்தி- ரூ. 5
சர்.சி.வி.ராமன்- ரூ. 10
ஜெ.ஆர்.டி.டாடா- ரூ. 15
அன்னை தெரசா- ரூ. 20
இவையெல்லாம் சமீபத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அவற்றின் மதிப்பு விவரம் என்பதை அறிக.
நாம் தினமும் சந்திக்கும் நமது மதிப்பிற்குரிய நண்பரான தபால்காரருக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் ஆள் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளன.
நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரி இருவருக்கும் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய அரசு ஜி.கே.மூப்பனார், வேதாத்திரி மகரிஷி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம், பி.ஜீவானந்தம், திருவள்ளுவர், குமரகுருபரர், ஜி.யூ.போப், சி.சுப்ரமணியம், ஓமந்தூர் ராமசாமி, இம்மானுவேல் சேகரனார் மற்றும் வள்ளல் பச்சையப்பர் ஆகியோருக்கு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு அஞ்சல் தலைகள் வெளியிட்டது இதுவே முதல்முறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










