ஃபேஷியல் டிப்ஸ்
சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சைச்சாறை கலந்து நீராவி பிடித்தால்சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேறி முகம் மிருதுவாக மாறும். ஆவி பிடித்தபின் பன்னீரைக் கொண்டு முகத்தைத்


* சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சைச்சாறை கலந்து நீராவி பிடித்தால்
சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேறி முகம் மிருதுவாக மாறும். ஆவி பிடித்தபின் பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைப்பது நல்லது.
* சில துளி நல்லெண்ணெயோடு அதே அளவு தண்ணீர்த் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் நன்கு நுரைத்து வெண்மையான பசை போல் வரும். இதை முகத்தில் தேய்த்துத் தடவிக் கழுவினால் முகம் சுருக்கமின்றி பளபளப்பாக இருக்கும்.
* கண்ணைச் சுற்றி கருவளையம் உள்ளவர்கள் தக்காளி, எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
* மூக்கின் ஓரங்களில் உள்ள கருப்புக்கு தினமும் ஆவி பிடித்து பஞ்சால் மூக்கின் ஓரங்களை துடைத்து எடுக்க வேண்டும்.
* முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* காய்ச்சாத பால் எடுத்து, அதில் சிறிது பஞ்சை நனைத்து முகத்தில் மென்மையாக ஒற்றி எடுத்து, அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயிறு மாவு கலந்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
* இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு, உருளைக்கிழங்கு சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...