அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றால் பாடங்களை நன்றாக மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அப்படி மனப்பாடம் செய்யும்போது பாடங்களைப் புரியாமல் படித்திருந்தால், தேர்வில் பதில் எழுதும்போது ஏதோ ஓர் இடத்தில் மறந்துபோனால் அந்தக் கேள்விக்கான பதில் முழுவதும் மறந்துபோய்விடும். அதுமட்டுமல்ல, அந்தக் கேள்விக்கான பதிலைச் சரியாக எழுத முடியவில்லை என்பதால் ஏற்படும் டென்ஷனில் அதற்குப் பிறகு எழுதும் நன்றாகத் தெரிந்த கேள்விக்கான பதில்களும் மறந்து போய்விடும். இது அந்தத் தேர்வை மட்டுமல்ல, அடுத்த தேர்வையும் பாதிக்கும். எனவே படித்த பாடங்களை மறந்துவிடாமல் இருக்க, பாடங்களை முதலில் புரிந்து, அதன் பின்பு மனப்பாடம் செய்ய வேண்டும்.