அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

என்ன தொழில் செய்யலாம்!

ஐம்பதுக்கும் மேற்பட்ட கைத்தொழில் பயிற்சிகளை  எங்கள்  நிறுவனம் அளித்து வருகிறது  என்பதைவிட

News image
Updated On :7 டிசம்பர் 2014, 5:28 am

ரிஷி

ஐம்பதுக்கும் மேற்பட்ட கைத்தொழில் பயிற்சிகளை  எங்கள்  நிறுவனம் அளித்து வருகிறது  என்பதைவிட 3000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரை உருவாக்கியிருக்கிறது என்பதில்தான் எங்களுக்கு சந்தோஷம். அதோடு எங்களுடைய தாகம் நின்றுவிடவில்லை மேலும் மேலும்  வறுமையில் வாடும் பல பெண்களை தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை.  தொழில் என்றதும் பெரிய முதலீடு செய்ய வேண்டுமே என்று சிலர் எண்ணுவார்கள். அப்படி இல்லாமல்  தன்னம்பிக்கை இருந்தால் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம். ரூபாய் 500 முதல் ரூபாய் 15000 வரை முதலீட்டில் என்னென்ன தொழில்களை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அதற்காக சில யோசனைகளை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்கிறார் சுகா தொண்டு நிறுவனத்தின்

நிறுவனர் உமாராஜ்.

ரூபாய் 500 முதலீட்டில் டயட் சிறுதானிய உடனடி உணவு: தற்போது  அனைவரும் சத்தான உணவு உட்கொள்ள விரும்பிகின்றனர். இதனை நிதானமாக தயாரிப்பதற்கு தேவையான நேரம் இந்த அவசர யுகத்தில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கு ஏற்றவாறு சிறுதானியங்களை கொண்டு உடனடி உணவு தயார் செய்து விற்பனை செய்யலாம்.

சப்பாத்தி: வேலைக்கு செல்வோர், வயதானவர்கள், பேச்சிலர்கள் அனைவரும் இரவு நேர உணவாக சப்பாத்தியை விரும்புவர். இதனை நீங்கள் உள்ள பகுதியில் ஆர்டர் வாங்கி செய்து கொடுப்பதனால் நமக்கு தேவையான பணம் கிடைக்கும்.

கூட்டு, பொரியல், சாம்பார், குழம்பு வகைகள்: நிறைய பேருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் விதவிதமாக கூட்டுப் பொரியல் சாப்பிட ஆசை இருக்கும்; செய்ய நேரம் கிடைக்காது. ஓட்டல் உணவு உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. ஆதலால் வீட்டில் தயார் செய்த கூட்டு, பொரியல், சாம்பார், குழம்பு ஆகியவற்றை மட்டும் விற்பனை செய்தால் மக்கள் விரும்பி வாங்குவர். (தரம் முக்கியம்)

அறுகம்புல், கற்றாழை சாறு: தற்போது காலை வேளையில் ஏராளமான மக்கள் நடைபியிற்சி செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்ப அறுகம்புல் சாறு, கற்றாழை சாறு போன்ற பலவித சத்தான சாறுகளை தயாரித்து மக்கள் நடைபயிற்சி செய்யும் இடங்களில் விற்பனை செய்யலாம்.

டீ, காபி, வடை, சமோசா: சிறிய, சிறிய தொழிற் கூடங்களில் கேன்டீன் வசதி இருக்காது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியில் சென்று டீ சாப்பிட நேரமும் இருக்காது. அதுபோன்ற இடங்களில் டீ, காபி, வடை, சமோசா போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யலாம். ( டீ கேன் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.